/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு மகளிர் கல்லுாரியில் தொல்லியல் கருத்தரங்கு
/
அரசு மகளிர் கல்லுாரியில் தொல்லியல் கருத்தரங்கு
ADDED : பிப் 28, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் வரலாற்று துறை சார்பில் தொல்லியல் சார்ந்த கருத்தரங்கு நடைபெற்றது.
முதல்வர் இந்திரா துவக்கி வைத்தார். வரலாற்று துறை தலைவர் வெண்ணிலா வரவேற்றார். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு, ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி வரலாற்று பேராசிரியர் கந்தசாமி சிறப்பு வகித்தனர். தமிழரின் தொன்மை நாகரீகம் என்ற தலைப்பில் குடவரைக்கோயில்கள், இறைவழிபாடு, தமிழி எழுத்துக்களின் சிறப்பு, இரும்பு உருவாக்கம் பற்றி பேசினர்.
விரிவுரையாளர் முனீஸ்வரன் தொகுத்து வழங்கினார். மாணவி சுகன்யா நன்றி கூறினார்.

