sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மோசடி வழக்கில் கைதானவர் 3 மாநிலத்திலும் கைவரிசை

/

மோசடி வழக்கில் கைதானவர் 3 மாநிலத்திலும் கைவரிசை

மோசடி வழக்கில் கைதானவர் 3 மாநிலத்திலும் கைவரிசை

மோசடி வழக்கில் கைதானவர் 3 மாநிலத்திலும் கைவரிசை


ADDED : ஜூலை 26, 2024 12:29 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பெரியநரிக்கோட்டையை சேர்ந்தவர் ராபர்ட். இன்ஸ்டாகிராம் விளம்பரம் பார்த்து பகுதி நேர வேலைக்கு முயற்சித்தார். விளம்பரதாரர் வங்கி கணக்கிற்கு 10 தவணையில் 45 லட்சம் ரூபாய் அனுப்பினார். அவர் முதலீடு செய்த பணத்திற்கு லாபம் கிடைக்கவில்லை. ஏமாந்ததை உணர்ந்த ராபர்ட் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் வங்கி கணக்குக்கு ராபர்ட் பணம் 15 லட்சம் ரூபாய் சென்றது தெரியவந்தது. சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் ஜூலை 23ல் தினேஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலீசார் கூறியதாவது: தினேஷ்குமார் கடன் பிரச்னையில் இருந்துள்ளார். நாமக்கல்லில் ராஜேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. தினேஷ்குமார் வங்கி கணக்கை வாடகைக்கு கொடுத்தால், 1 சதவீத கமிஷன் தருவதாக ராஜேஷ் கூறியுள்ளார். அதன்படி தன் வங்கிக் கணக்கு விபரத்தை தினேஷ்குமார் கொடுத்துள்ளார். மூன்று கோடி ரூபாய் வரை தினேஷ்குமார் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்காக 3 லட்சம் ரூபாயை கமிஷனாக தினேஷ்குமாருக்கு அந்த மோசடி கும்பல் கொடுத்துள்ளனர். ராஜேஷை தேடி வருகின்றோம் என்றனர்.






      Dinamalar
      Follow us