sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டு இயந்திரங்கள் அனுப்புவது துவக்கம்

/

சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டு இயந்திரங்கள் அனுப்புவது துவக்கம்

சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டு இயந்திரங்கள் அனுப்புவது துவக்கம்

சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டு இயந்திரங்கள் அனுப்புவது துவக்கம்


ADDED : மார் 22, 2024 04:47 AM

Google News

ADDED : மார் 22, 2024 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் இருந்து 4 சட்டசபை தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நேற்று துவங்கியது.

சிவகங்கை லோக்சபா தொகுதியில் உள்ள சிவகங்கை, மானாமதுரை (தனி), திருப்புத்துார், காரைக்குடி ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் 1,357 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.

ஓட்டுச் சாவடிக்கென தலா ஒரு ஓட்டுப்பதிவு, கட்டுப்பாட்டு, ஓட்டு உறுதிதன்மை இயந்திரங்கள் வீதம் ஒதுக்கப்பட உள்ளன.

இது தவிர தனியாக தலா 1,628 ஓட்டுப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 1,764 ஓட்டு உறுதி தன்மை இயந்திரங்கள் கையிருப்பில் உள்ளன. நேற்று இந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கான சீரமைத்தல் பணி கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துக்கழுவன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிவகங்கை விஜயகுமார், காரைக்குடி பால்துரை, மானாமதுரை (தனி) ஜெயமணி, திருப்புத்துார் சரவண பெருமாள், கட்சி சார்பில் பா.ஜ., மாவட்ட துணை தலைவர் சுகனேஸ்வரி, ஆம் ஆத்மி மாவட்ட செயலாளர் பி.ராமு, காங்., நகர் தலைவர் விஜயகுமார், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ், மார்க்சிஸ்ட் மாவட்ட குழு மெய்யப்பன், இந்திய கம்யூ., நகர் கமிட்டி உறுப்பினர் குஞ்சரம் பங்கேற்றனர்.

பின்னர் ஓட்டுப்பதிவு இயந்திர கோடவுனில் இருந்து அந்தந்த சட்டசபை தொகுதிக்கான ஓட்டுப்பதிவு, கட்டுப்பாடு, ஓட்டு உறுதி தன்மை இயந்திரங்கள் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு, தாசில்தார் அலுவலக பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன.

இதில், கலெக்டர் பி.ஏ., (தேர்தல்) ஜான்சன் சகாயம், தேர்தல் தாசில்தார் மேசியதாஸ், தாசில்தார்கள் சிவராமன், ராஜா, தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us