/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவமனையில் தீக்குளிக்க முயற்சி
/
மருத்துவமனையில் தீக்குளிக்க முயற்சி
ADDED : செப் 05, 2024 07:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை,:காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நெம்மேனி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் 35. இவர் நேற்று முன்தினம் இரவு 10:35 மணிக்கு தனது குழந்தைகளுடன் டூவீலரில் வந்தார். தீவிர சிகிச்சை பிரிவு வளாகம் முன்பு தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
அப்போது மருத்துவமனையில் பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையில் சிகிச்சையில் சேர்த்தனர். போலீசார் விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக தீக்குளிக்க முயற்சி செய்ததாக கூறியுள்ளார்.