நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் தொற்றா நோய் மற்றும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. ஆசிரியர் முத்துலெட்சுமி வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார டாக்டர்கள் அபிராமி, யாழிசை பெண்களின் உடல் நல பிரச்னை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செவிலியர் உமா மகேஸ்வரி, மருந்தாளுனர் கனிமொழி கலந்துகொண்டனர்.