நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லுாரி, மது விலக்கு அமலாக்கப் பிரிவு இணைந்து போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் காஞ்சிரங்கால் கிராமத்தில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் இந்திரா, மதுவிலக்கு கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ் தலைமை வகித்தனர். மாணவிகள் ஊமை மொழி நாடகம், தெரு கூத்து நாடகம் மூலம் கிராம மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். பேராசிரியர் பூங்கொடி நிகழ்ச்சிகளை ஒருஙகிணைத்தார்.

