ADDED : ஜூன் 25, 2024 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : திருப்புவனத்தில் மாவட்ட மகளிர் அதிகார மையம் சார்பில் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள், சமூக நல துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தொழில் மையத்தின் மூலம் வழங்கப்படும் கடன் உள்ளிட்டவை பற்றி கட்டுமானம் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சமூக நல துறை அலுவலர் ரதிதேவி, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் நாகராஜன், ஐ.ஓ.பி., கிளை மேலாளர் கேசவ் ராம்தாஸ், அஞ்சலக அலுவலர் திருமுருகன் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.