ADDED : ஜூலை 11, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாணவர் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது.
பள்ளி தாளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முதல்வர் கவுரி சாலமன் தலைமை தேர்தல் அலுவலராக செயல்பட்டார். மாணவர் தலைவர், துணைத்தலைவர், ஒழுங்கு கட்டுப்பாட்டு தலைவர், ஒழுங்கு கட்டுப்பாட்டு துணைத்தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.