sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு 700 காளைகள் பங்கேற்பு

/

அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு 700 காளைகள் பங்கேற்பு

அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு 700 காளைகள் பங்கேற்பு

அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு 700 காளைகள் பங்கேற்பு


ADDED : மே 28, 2024 04:11 AM

Google News

ADDED : மே 28, 2024 04:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலைகிராமம், : சாலைகிராமம் அருகே அய்யம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில், காளைகள் முட்டியதில் 15 பேர் காயமுற்றனர்.

அய்யம்பட்டி கழுங்கு முனீஸ்வரர் கோயில் களரி விழாவை முன்னிடடு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. சிவகங்கை கோட்டாட்சியர்விஜயகுமார் தலைமை வகித்தார். தாசில்தார் கோபிநாத் முன்னிலை வகித்தார்.

மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி, ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், ஊராட்சி தலைவர் தங்கம் பங்கேற்றனர். வீரர்கள் உறுதிமொழி எடுத்தனர். முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் அனைத்து காளைகளும் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விட்டனர்.

காளைகளை வீரர்கள் உற்சாகமாக விரட்டி பிடித்தனர். காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், சைக்கிள், அண்டா, பானை, குத்துவிளக்கு, கட்டில், பீரோ பரிசாக வழங்கினர்.

அய்யம்பட்டி கிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us