/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாழை பயிர் காப்பீடு பிரீமியம்செலுத்த செப். 16 கடைசி நாள் துணை இயக்குனர் தகவல்
/
வாழை பயிர் காப்பீடு பிரீமியம்செலுத்த செப். 16 கடைசி நாள் துணை இயக்குனர் தகவல்
வாழை பயிர் காப்பீடு பிரீமியம்செலுத்த செப். 16 கடைசி நாள் துணை இயக்குனர் தகவல்
வாழை பயிர் காப்பீடு பிரீமியம்செலுத்த செப். 16 கடைசி நாள் துணை இயக்குனர் தகவல்
ADDED : ஆக 01, 2024 04:34 AM
சிவகங்கை: மாவட்டத்தில் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் செப்., 16 க்குள் பயிர் காப்பீட்டிற்கான பிரீமியத்தை செலுத்த வேண்டும் என தோட்டக்கலை துணை இயக்குனர் குருமணி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் ஆண்டு தோறும் 1,200 எக்டேரில் விவசாயிகள் வாழை பயிரிட்டு வருகின்றனர். வறட்சி, வெள்ளம், நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பயிர் விளைச்சல் குறையும் போது ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்யலாம்.
இந்த ஆண்டு குறுவை பருவத்தில் பயிரிட்டுள்ள வாழை பயிருக்கு சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, திருப்புவனம், சிங்கம்புணரி ஆகிய தாலுகா விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்.
காப்பீடு தொகை எக்டேருக்கு ரூ.1,24,982 கிடைக்கும். இதற்கு பிரீமியமாக விவசாயிகள் ரூ.6,249 கட்ட வேண்டும்.
வாழை பயிருக்கு காப்பீடு செய்ய செப்., 16 கடைசி நாள். காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் வங்கி கணக்கு வைத்துள்ள தேசிய வங்கி அல்லது தொடக்க கூட்டுறவு கடன் சங்கம், இ- சேவை மையம் மூலம் பிரீமிய தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம், என்றார்.