ADDED : பிப் 28, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் முன்னுரிமை திட்டங்களுக்கான கடனுதவி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார்.
நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் அருண்குமார், முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா  பங்கேற்றனர்.
நபார்டு வங்கி மூலம் முன்னோடி திட்டங்களுக்கு அடுத்த நிதி ஆண்டிற்கு வழங்கப்பட வேண்டிய வேளாண், தொழில், ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கடன் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

