ADDED : ஜூன் 26, 2026 04:53 PM
அ நிறம் | அளவு
திருப்பாச்சேத்தி, ஜூன் 27-
திருப்பாச்சேத்தி மருநோக்கும் பூங்குழலி உடனாய திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா 24ம் தேதி நடந்தது. விழாவில் சுற்று வட்டார கிராம மக்கள் பலரும் பங்கேற்றனர். நெரிசலை பயன்படுத்தி திருப்பாச்சேத்தியை சேர்ந்த சித்ரா என்பவரிடம் மூன்று பவுனும், ராக்கு 63 என்பவரிடம் 4 பவுன் தங்க சங்கிலியையும் திருடர்கள் திருடிச் சென்றனர். திருப்பாச்சேத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
