ADDED : ஜூலை 23, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரியில் வணிகவியல் மன்ற துவக்க விழா நடந்தது. கல்லுாரி செயலர் அசோக் தலைமை வகித்தார். முதல்வர் விசுமதி துவக்கி வைத்தார். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி பேராசிரியர் கேத்தராஜ் ஆலோசனைகளை வழங்கினார். மாணவி சுபஸ்ரீ நன்றி கூறினார்.
இக்கல்லுாரியில், நுாலகத்துறை சார்பில் வாசிப்புமன்ற துவக்க விழா நடந்தது. மாணவியர் தலைவர் சந்திரருசிகா வரவேற்றார். முதல்வர் வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் பூங்குழலி பேசினார். மாணவியர் மன்ற செயலாளர் சனோபர்நிஷா நன்றி கூறினார்.