/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூரில் ஆடித் தேரோட்டம்
/
திருக்கோஷ்டியூரில் ஆடித் தேரோட்டம்
ADDED : ஆக 08, 2024 04:47 AM
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் திருவாடிப்பூர விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆடிப்பூர விழா 11 நாட்கள் நடைபெறும். ஜூலை 29 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினசரி காலையில் திருவீதிப் புறப்பாடும், இரவில் வாகனங்களில் ஆண்டாள், பெருமாள் புறப்பாடும் நடந்தது.
நேற்று ஆண்டாள் பிறந்த ஆடி பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
நேற்று காலை 9:30 மணிக்கு ஆண்டாள் நாச்சியார் பெருமாள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 4:40 மணிக்கு தேருக்கு தீபாராதனை நடந்து வடம் பிடிக்கப்பட்டது. பக்தர்கள் அங்காங்கே சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
நாளை காலை 9:00 மணிக்கு தீர்த்தவாரியும், இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி மூலஸ்தானத்திற்கு எழுந்தருளலுடன் விழா நிறைவடையும்.