ADDED : செப் 11, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் வணிக கணினி பயன்பாட்டுவியல் துறை சார்பில் மாணவர்களுக்கான குடிமைப் பணி தேர்விற்கான பயிற்சி செயலர் செபாஸ்டியன் தலைமையில் நடந்தது.
முதல்வர் ஜான் வசந்த் குமார் முன்னிலை வகித்தார். மாணவி சவுமியா வரவேற்றார். மதுரை சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி தலைவர் அர்ஜுன் நாதன் தேர்விற்கு தயார் செய்வது பற்றியும் தேர்வை எதிர்கொள்வது பற்றியும் விளக்கமளித்தார். சுவைதா நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர்கள் பேராசிரியர்கள் பங்கேற்றனர். துறை தலைவர் சிவ பாலாஜி தலைமையில் பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.