ADDED : ஜூலை 05, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி: பூவந்தி மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லூரியில் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கல்லூரி செயலர் அசோக் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் விசுமதி வாழ்த்துரை வழங்கினார். டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட தேர்வுகளில் பங்கேற்க கல்வி தகுதி, வயது வரம்பு, விதிமுறைகள், அதன் மூலம் கிடைக்கும் பதவிகள் குறித்து பயிற்சியாளர் பவானி சிறப்புரையாற்றினார்.
இணைய வழியில் நடக்கும் போட்டித் தேர்வு, அதில் பங்கேற்பது குறித்தும் விளக்கமளித்தார். மூன்றாமாண்டு மாணவி சத்யபிரியா நன்றி கூறினார்.