sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆடு விற்ற பணம் பறிமுதல்; விவசாயி கண்ணீர்

/

ஆடு விற்ற பணம் பறிமுதல்; விவசாயி கண்ணீர்

ஆடு விற்ற பணம் பறிமுதல்; விவசாயி கண்ணீர்

ஆடு விற்ற பணம் பறிமுதல்; விவசாயி கண்ணீர்


ADDED : மார் 28, 2024 11:19 PM

Google News

ADDED : மார் 28, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரை அருகே ஆடுகளை விற்பனை செய்து கொண்டு வந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மானாமதுரை எம்.கரிசல்குளம் சோதனை சாவடி அருகே நிலையான தேர்தல் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் கருப்பு ராஜா,சிறப்பு எஸ்.ஐ., சந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

பரமக்குடியிலிருந்து மதுரை சென்ற மதுரை கீழ வடக்கூர் பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி மகன் கணேஷ்குமார் 34,என்பவர் பரமக்குடியில் ஆடுகளை விற்பனை செய்து கொண்டு வந்த ரூ.1.95 லட்சத்திற்கு உரிய கணக்கு இல்லாததால் அப்பணத்தை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,தேர்தலை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் பல்வேறு பிரிவுகள் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. இவர்கள் பறிமுதல் என்ற பெயரில் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கொண்டு செல்லும் பணத்தை மட்டுமே பறிமுதல் செய்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம் கண்காணித்து பணத்தை அதிகளவில் கொண்டு செல்லும் அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் வாகனங்களை சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்றனர்.

ரூ.98 ஆயிரம் பறிமுதல்


பள்ளத்துார் அருகே உள்ள மணச்சையில் தேர்தல் கண்காணிப்புக்குழு அதிகாரி பழனிகுமார் தலைமையில், தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வழியாக, வடகுடியைச் சேர்ந்த நெல்லியான் மகன் ராஜசேகரன் 57, பைக்கில் வந்தார்.கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்தபோது உரிய ஆவணமின்றி ரூ.98 ஆயிரத்து 800 வைத்திருந்தது தெரிய வந்தது. தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us