ADDED : ஜூலை 07, 2024 02:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட கல்லடிதிடல் கிராமத்தில் உள்ள புனித பதுவை அந்தோணியார் சர்ச்சில் புதிதாக பீடம், கோபுரம் மற்றும் மணிக்கூண்டு கட்டும் பணி நடந்தது.
நேற்று முன்தினம் நடைபெற்ற அர்ச்சிப்பு விழாவில் சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம் அர்ச்சிப்பு செய்து வைத்தார்.மறைமாவட்ட முதன்மைகுரு அருள்ஜோசப், பொருளாளர் ஆரோன் மற்றும் மறைமாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார்கள் பங்கேற்ற திருப்பலி நடைபெற்றது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை பாஸ்கர்டேவிட் மற்றும் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.