ADDED : மார் 07, 2025 08:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர் : சிங்கம்புணரி ஒன்றியத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் வெங்கடேஷ்25. இவர் கட்டட சென்ட்ரிங் வேலை பார்க்கிறார்.
அவர் பதினோராம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரை அடுத்து திருப்புத்தூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவகி வெங்கடேைஷ போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகிறார்.