
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
மதுரை, மண்டபம், பெரம்பலுார், சிவகங்கை ஆகிய நான்கு அணிகள் பங்கேற்கின்றன. நேற்று காலை துவங்கிய போட்டியை சிவகங்கை பள்ளி முதல்வர் மனோஜ் குமார் துவக்கி வைத்தார். சிறப்பாக செயல்பட்ட வீரர்களை ஒர் அணியாக தேர்ந்தெடுத்து அவ்வணி சென்னை மண்டல போட்டியில் பங்கேற்க உள்ளது.