ADDED : ஆக 07, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : கண்ணங்குடி ஒன்றியம் பெருங்கானுாரைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி ஜோதி. 46. இவர்களது மகன் பாலு. பாலுவும் அதே ஊரைச் சேர்ந்தவர் ராஜேஷ் , களத்துாரை சேர்ந்தவர் மணிவேல். மூவரும் நண்பர்கள். மூவர் மீது வழக்குகள் உள்ளன.
நேற்று முன்தினம் பாலு டீசல் வாங்க சென்று உள்ளார். வழியில் நின்ற மணிவேல், ராஜேஷ் இருவரும் பாலுவை மறித்து உள்ளனர். பாலு நிற்காமல் வந்து விட்டார். கோபம் அடைந்த இருவரும் பாலு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். அரிவாளால் பாலுவை வெட்ட முயன்றனர். பாலுவின் தாயார் ஜோதி தடுத்துள்ளார். இதில் ஜோதிக்கு வெட்டு காயம் ஏற்பட்டது.போலீசார் விசாரிக்கின்றனர்.