ADDED : மே 24, 2024 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர்: கல்லல் தென்கரை பகுதியில் நேற்று மாலை 2 மான்கள் நாய்கள் விரட்டி கடித்ததில் உயிரிழந்தன.
இறந்தது 6 மாத பெண் புள்ளி மான், 2 வயது ஆண் புள்ளி மான் ஆகும். வனத்துறையினர் உடல்களை கைப்பற்றி, தென்கரை கால்நடை மருத்துவர் மூலம் உடல் கூறு ஆய்வு நடத்திய பின் புதைத்தனர். கீழச்சிவல்பட்டியில் நேற்று வழி தவறி குடியிருப்புக்குள் வந்த புள்ளி மானை மீட்ட வனத்துறையினர் கம்பனுார் வனப்பகுதியில் விடுவித்தனர்.