
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று சட்டத்திருத்தங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சிவகங்கையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் முன் இண்டியா கூட்டணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க., வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். இந்திய கம்யூ., சார்பில் வழக்கறிஞர் மருது, ம.தி.மு.க., சார்பில் வழக்கறிஞர் தீபன் சக்கரவர்த்தி, விஜயஜோதி, மகேந்திரன், சேதுராமச்சந்திரன், முருகன், செந்தில்குமார் பங்கேற்றனர்.