/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
/
சிவகங்கை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
சிவகங்கை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
சிவகங்கை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
ADDED : ஆக 04, 2024 06:09 AM

காரைக்குடி : காரைக்குடி சாணங்காளி அம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பக்தர்கள் நேற்று பால்குடம் எடுத்தும் தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடி மெய்யப்பன் அம்பலம் தெருவில் உள்ள சாணங்காளி அம்மன் கோயில் 31 வது ஆண்டு ஆடிப்பெருக்கு விழா கடந்த ஜூலை 26 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று, பக்தர்கள் முத்தாலம்மன் கோயிலில் இருந்து கோயில்கரகம், மதுக்குடம், முளைப்பாரி எடுத்து முக்கிய வீதி வழியாக கோயிலை வந்தடைந்தனர். பக்தர்கள் பால்குடம், அக்னிச் சட்டி, வேல்காவடி, பறவைக் காவடி எடுத்தும் தீ மிதித்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மஞ்சள் கயிறு கட்டி வழிபாடு
காரைக்குடி பகுதியில்ஆடிப்பெருக்கு அன்று, மக்கள் சுப காரியங்களை தொடங்குவார்கள்.
நீரின்றி அமையாது உலகு என்பதை அறிந்து பெருக்கெடுத்து வரும் நீரை போற்றி வணங்கும் நாளாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் நீர்நிலைகள் பெருக வேண்டும் என்றும், தண்ணீர் மற்றும் உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்க நதிக்கரைகளில் மக்கள் வழிபாடு செய்வர்.
ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரை மற்றும் தெப்பங்களில் மக்கள் ஒன்று கூடி மஞ்சளில் பிள்ளையார் செய்து வழிபாடு செய்வர்.
பெண்கள், மஞ்சள் கயிறு கட்டிக் கொள்வார். நேற்று காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயில் தெப்பத்தில், ஏராளமான பெண்கள் சிறப்பு வழிபாடு செய்து மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர்.