ADDED : ஏப் 19, 2024 05:20 AM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: சேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் அண்ணாமலையார் அறக்கட்டளை சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி முதல்வர் நாவுக்கரசு தலைமையில் நடந்தது.
தமிழ்த்துறை தலைவர்கண்ணதாசன் வரவேற்றார். அறக்கட்டளைநிறுவனர் பழனிராகுலதாசன் முன்னிலை வகித்தார். முன்னாள் தமிழ்த்துறை தலைவர் சபாஅருணாசலம் பேசினார். மாணவர்களுக்கு நடந்த போட்டியில் முதல் பரிசு அதிர்ஷ்டலெட்சுமி, இரண்டாம் பரிசு ராஜபாரதி, மூன்றாம் பரிசு வசந்தகுமார் பெற்றனர்.
முன்னாள் தமிழ்த்துறை தலைவர் ஆறுமுகம்,கவிஞர் அரவரசன், அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் இளங்கோ, உதவி பேராசிரியர் வள்ளியம்மை பங்கேற்றனர்.
