ADDED : பிப் 26, 2025 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் மும்மொழிக் கொள்கையை கண்டித்து தி.மு.க., மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காரைக்குடி ராஜிவ் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
சிறுபான்மை ஆணைய மாநில ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மேயர் முத்துத்துரை, மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கை மாறன் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் தென்னவன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்துார் கே.எஸ். ரவி, அரசு வழக்கறிஞர் பால சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் ஆனந்த், சின்னத்துரை, கோட்டையூர் சேர்மன் கார்த்திக் சோலை மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

