sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு பஸ்சை போதையில் இயக்கிய டிரைவர் கைது

/

அரசு பஸ்சை போதையில் இயக்கிய டிரைவர் கைது

அரசு பஸ்சை போதையில் இயக்கிய டிரைவர் கைது

அரசு பஸ்சை போதையில் இயக்கிய டிரைவர் கைது


ADDED : ஜூன் 14, 2024 10:27 PM

Google News

ADDED : ஜூன் 14, 2024 10:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: காரைக்குடியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்வரன் 50, இவரது மனைவி கவிதா 46, மகன் நகுல் 20 மூவரும் தேவகோட்டைக்கு சென்று விட்டு இரவு 8:00 மணிக்கு காரில் காரைக்குடிக்கு சென்றனர்.

சடையன்காடு அருகே வேகத்தடுப்பில் கார் நின்றது. தேவகோட்டையில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் சென்றது.டிரைவர் தனபால் ஓட்டி வந்தார். அதிவேகமாக வந்த அரசு பஸ் வேகத்தடுப்பில் நின்ற கார் மீது மோதியதில் கார் நொறுங்கியது. காரில் இருந்த மூவரும் காயமடைந்தனர்.

இருவர் தேவகோட்டை மருத்துவமனையிலும், படுகாயமடைந்த கவிதா காரைக்குடி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அங்கு நின்ற மக்கள் அரசு பஸ் டிரைவர் தனபாலை பார்த்த போது டிரைவர் மதுஅருந்தி போதையில்இருந்தது தெரிந்தது. மக்கள் டிரைவரை தாக்கினர்.

போதையில் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் ரோட்டில் படுத்து துாங்கினார். ஆறாவயல் போலீசார் வரவே டிரைவரை போலீசில் ஒப்படைத்தனர். போதை டிரைவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து சான்று பெற்றனர்.போதையில் பஸ் ஓட்டிய டிரைவர் தனபாலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us