ADDED : ஜூன் 14, 2024 10:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: சாக்கோட்டையில் உள்ள சாக்கை உய்யவந்தம்மன் கோயில் தேர்த்திருவிழா நேற்று நடந்தது.
சாக்கோட்டை சாக்கை உய்யவந்தம்மன் கோயில் திருவிழா கடந்த ஜூன் 6ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
முக்கிய திருவிழாவான பால்குட திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. தினமும் காலை மற்றும் இரவு அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் மாவிளக்கு வைத்தும், தீச்சட்டி, பறவைக்காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேரோட்டம் நேற்று மாலை நடந்தது.
முன்னதாக அம்மன் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. இதில் சாக்கோட்டை, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.