ADDED : மார் 11, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் 60.
இவர் வயல்வெளியில் காட்டு பன்றி தொல்லை அதிகமாக இருந்ததை தொடர்ந்து அரசு அனுமதியின்றி மின்வேலி அமைத்திருந்தார். ராஜகம்பீரம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து 65, என்பவர் மேய்ச்சலுக்கு சென்ற தனது மாடுகளை தேடி சென்ற போது இந்த மின்வேலியில் சிக்கி பலியானார்.
மானாமதுரை போலீசார் அனுமதியின்றி மின் வேலி அமைத்ததாக கிருஷ்ணனை கைது செய்தனர்.