ADDED : ஜூலை 05, 2024 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாச்சியாபுரம்: திருப்புத்துார் அருகே தென்கரை மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிளி சி.பி.எஸ்.சி.பள்ளியில் இ.எஸ்.ஐ. விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷன் சிவகங்கை கிளை மேலாளர் எம். சதீஷ் பங்கேற்றார். இஎஸ்.ஐ., பயன்கள், பங்களிப்பு நிபந்தனைகள் மற்றும் பணியாளர் மாநில காப்பீடு குறித்து விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பணியாளர்கள் இ.எஸ்.ஐ., குறித்து கேள்வி கேட்ட தங்கள் உரிமைகள் பற்றியும், பணியிட காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் விளக்கினார். பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.