sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.8.89 லட்சம் வழிப்பறி

/

நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.8.89 லட்சம் வழிப்பறி

நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.8.89 லட்சம் வழிப்பறி

நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.8.89 லட்சம் வழிப்பறி


ADDED : ஜூலை 28, 2024 03:06 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பி.எஸ்.எஸ்., மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்களிடம் ரூ.8.89 லட்சத்தை வழிப்பறி செய்த அந்நிறுவன ஊழியர் உள்ளிட்ட 2 கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

காளையார்கோவில் கிருஷ்ணாநகரில் அமைந்துள்ள இந்நிதி நிறுவனத்தில் விருதுநகர் சம்பகுளம் மாரிமுத்து மகன் பழனி முருகன் 30, ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் பாலுசாமி மகன் கண்ணன் 24, பணிபுரிகின்றனர். இவர்கள் ஜூலை 18 மதியம் 3:50 மணிக்கு நிதி நிறுவனத்தில் இருந்து ரூ. 8 லட்சத்து 89 ஆயிரத்து 730 ஐ காளையார்கோவிலில் உள்ள வங்கி ஒன்றில் செலுத்த டூவீலரில் சென்றனர். டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத மூவர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை வழிப்பறி செய்து தப்பினர். நிதி நிறுவன ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் சிவகங்கை கீழவாணியங்குடியைச் சேர்ந்த குட்ட மணி என்ற மணிவண்ணன் 23, நிதி நிறுவனத்தில் பணிபுரியும் சிவகங்கை எம்.ஜி.ஆர்.,நகரைச் சேர்ந்த பாலாஜி 23, ஆகியோரை கைது செய்தனர். வழிப்பறியில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us