ADDED : ஆக 23, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் ஆக., 30 அன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஆக.,30 அன்று காலை 10:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில், அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். விவசாயிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று விவசாயம் சார்ந்த புகார், குறைகளை தெரிவிக்கலாம், என்றார்.