sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையை குளிர்வித்த மழை   விவசாயிகள் மகிழ்ச்சி

/

சிவகங்கையை குளிர்வித்த மழை   விவசாயிகள் மகிழ்ச்சி

சிவகங்கையை குளிர்வித்த மழை   விவசாயிகள் மகிழ்ச்சி

சிவகங்கையை குளிர்வித்த மழை   விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : ஜூன் 20, 2024 04:44 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: காரைக்குடியில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் அதிகபட்சமாக 44.60 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து, அவ்வப்போது மழை கை கொடுத்து வந்தது. இருப்பினும் போதிய மழையின்றி சிவகங்கையில் அனல் காற்று, வெயிலின் உச்சம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், கோடை விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தனர். மேலும், ஆங்காங்கே குடிநீர் பிரச்னையும் ஏற்படும் நிலை உருவானது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இடி மின்னலுடன் பலத்த மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் மழைக்கு பின் குளிர்ந்த காற்று வீச தொடங்கியுள்ளது.

காரைக்குடியில் அதிகபட்சமாக 44.60 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக திருப்புவனத்தில் 36.20, திருப்புத்துார் 15.40, சிவகங்கை 15.20, சிங்கம்புணரி 8.40 மி.மீ., வரை மழை பதிவாகியுள்ளது.நல்ல மழை பெய்து குளிர்ச்சியாக காணப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலால் மக்கள் அவதிக்குள்ளாகினர். கடந்த 2 நாட்களாக மேகங்கள் ஒன்று கூடி வந்தாலும் மழை பெய்யாமல் போனது. நேற்று மதியம் 3:30 மணிக்கு பெய்ய துவங்கிய மழை அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.இதனால் மானாமதுரையில் ரோடுகளிலும்,தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது.






      Dinamalar
      Follow us