நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே வடவன்பட்டி கல்லம்பட்டியை சேர்ந்த பாண்டித்துரை 24, என்பவருக்கும் ஏ.எல். உசிலம்பட்டியை சேர்ந்த பூமிகா 19, என்பவருக்கும் பிப். 3ல் திருமணம் நடந்தது.
பூமிகா சிவகங்கை கல்லுாரியில் பி.எஸ்.சி., படித்து வந்துள்ளார். திருமணமான ஓரிரு நாளில் கணவன் மனைவி இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிப். 24ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூமிகா துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தாயார் அம்பிகா அளித்த புகாரில் எஸ்.எஸ்.கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.

