ADDED : செப் 11, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : திருமயம் லேனாவிலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நடந்தது. இயக்குனர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன் வரவேற்றார்.
மவுண்ட் சீயோன் கல்விக்குழும தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் தலைமை வகித்தார்.
கல்வி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை விவியன் ரேச்செல் ஜெய்சன் முன்னிலை வகித்தனர்.
கோவை ஸ்ரீ ரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன துணை தலைவர் (மனிதவளம் மற்றும் தொழில்துறை பணிகள்) குரு செல்வராஜ் பங்கேற்றார்.
முதல்வர் பாலமுருகன் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை அறிமுகம் செய்தார்.
முதன்மையர் (ஐ.சி.டி) ராபின்சன் நன்றி கூறினார். ஏற்பாட்டினை பேராசிரியர்கள் பாண்டியராஜன், விஜயராகவன் செய்தனர்.

