sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மீன் உருவம் பொறித்த பானை ஓடுகள் கீழடி 10ம் கட்ட அகழாய்வில் கண்டெடுப்பு

/

மீன் உருவம் பொறித்த பானை ஓடுகள் கீழடி 10ம் கட்ட அகழாய்வில் கண்டெடுப்பு

மீன் உருவம் பொறித்த பானை ஓடுகள் கீழடி 10ம் கட்ட அகழாய்வில் கண்டெடுப்பு

மீன் உருவம் பொறித்த பானை ஓடுகள் கீழடி 10ம் கட்ட அகழாய்வில் கண்டெடுப்பு


ADDED : ஜூலை 02, 2024 09:23 PM

Google News

ADDED : ஜூலை 02, 2024 09:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழடி:கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு கடந்த மாதம் 18ம் தேதி துவங்கியது. தொல்லியல் துறை இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் 13 தொழிலாளர்கள் அகழாய்வு செய்து வருகின்றனர்.

இங்குள்ள ஜவஹர், கார்த்திக், பிரபாகரன் ஆகியோருக்கு சொந்தமான நிலங்களில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு மூன்றரை அடி ஆழத்தில் ஆய்வு நடக்கிறது.

இதுவரை பாசி மற்றும் கண்ணாடி மணிகள் 'தா' என்ற 'தமிழி' எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட இரண்டு பானை ஓடுகள் சமீபத்தில் கிடைத்தது.

ஒரு ஓட்டில் மீன் உருவம் கோட்டுச் சித்திரமாகவும், மற்றொரு ஓட்டில் செதில்கள், கழுத்து வளையம் உள்ளிட்டவையும் வரையப்பட்டுள்ளன.

ஆறாம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடும், ஏழாம் கட்டத்தில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட உறை கிணறும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் சில குழிகளில் அகழாய்வு செய்தால் இன்னும் ஏராளமான ஆதாரங்கள் கிடைக்கும் என தொல்லியல் துறையினர் கூறினர்.






      Dinamalar
      Follow us