ADDED : ஜூன் 25, 2024 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சத்துணவு மையங்களில் காலிபணியிடம் நிரப்ப வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சத்துணவு மையங்களில் அமைப்பாளர், உதவியாளர், சமையலர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பென்ஷன் தொகையாக மாதம் ரூ.6,750 வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டே செயல்படுத்த வேண்டும். காலமுறை ஊதியத்துடன் கூடிய பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் மங்கையர்கரசி வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஷீலா கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் அலமேலு மங்கை நன்றி கூறினார்.