sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தேர்தலில் நிற்க பல கோடி வேணும் முன்னாள் அமைச்சர் ஆதங்கம்

/

தேர்தலில் நிற்க பல கோடி வேணும் முன்னாள் அமைச்சர் ஆதங்கம்

தேர்தலில் நிற்க பல கோடி வேணும் முன்னாள் அமைச்சர் ஆதங்கம்

தேர்தலில் நிற்க பல கோடி வேணும் முன்னாள் அமைச்சர் ஆதங்கம்

1


ADDED : பிப் 15, 2025 02:12 AM

Google News

ADDED : பிப் 15, 2025 02:12 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:''மக்களை நம்ப முடியவில்லை. பல கோடிகள் வைத்திருப்பவர்கள் தான் எம்.எல்.ஏ., தேர்தலில் நிற்க முடியும் '' என சிவகங்கையில் அ.தி.மு.க., ஜெ., பேரவை ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.

அவர் பேசியதாவது:

தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு ஆண்டு தான் உள்ளது. மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தி.மு.க.,வினர் பணத்தால் ஜெயித்து விடுவோம் என நம்புகின்றனர். மக்களை நம்ப முடியவில்லை. கிராமங்களில் ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு சொந்த பந்தங்கள் பார்த்து ஓட்டளித்தனர். இப்போது அந்த நிலை இல்லை.

பணம் கொடுப்பவர்கள் தான் வெற்றியடைகின்றனர். பல கோடிகள் வைத்திருப்பவர்கள் தான் எம்.எல்.ஏ., தேர்தலில் நிற்க முடியும். நமது கட்சியில் இரண்டு பேர் சும்மா இருக்க முடியாமல் பேட்டியை கொடுத்து விட்டனர். அதை ஊடகங்கள் பெரிது படுத்துகிறது. அ.தி.மு.க.,வை களங்கப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் வேலையாக உள்ளது.

கூட்டணி இன்றி வெற்றி பெற முடியாது என நம் கட்சியினரே நினைக்கிறார்கள். தி.மு.க.,வை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் நம்முடன் கூட்டணிக்கு வந்துவிடுவார்கள் என பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாம் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். கட்சியினர் அனைவரும் உழைத்து 2026 சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us