ADDED : பிப் 26, 2025 06:53 AM
இளையான்குடி: இளையான்குடி பேரூராட்சி கூட்டம் தலைவர் நஜூமுதீன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார்.சுகாதார ஆய்வாளர் தங்கதுரை வரவேற்றார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:
நாகூர் மீரா அ.தி.மு.க., கவுன்சிலர்: கண்மாய்க்கரை பஸ் ஸ்டாப் அருகே தனியாருக்கு இடத்தை தரை வாடகை விடுவதை பேரூராட்சி நிர்வாகம் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
பேரூராட்சி தலைவர் நஜூமுதீன்: மறுபரிசீலனை செய்யப்படும்.
செய்யது ஜமீமா தி.மு.க., கவுன்சிலர்: இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெறும் குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
பேரூராட்சி துணைத் தலைவர் இப்ராஹிம்: உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ராஜவேலு சுயேச்சை கவுன்சிலர்: பேரூராட்சியில் நிரந்தரமாக செயல் அலுவலர் இல்லாததால் பணிகளில் தேக்கம் ஏற்பட்டு வருகிறது.
பேரூராட்சி தலைவர் நஜூமுதீன்: அனைவரும் ஒன்றாக சேர்ந்து மாவட்ட அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைக்கப்படும்.
கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

