sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரை, இளையான்குடி கிராமங்களில் நீண்ட நேர மின்தடையால் மக்கள் அவதி

/

மானாமதுரை, இளையான்குடி கிராமங்களில் நீண்ட நேர மின்தடையால் மக்கள் அவதி

மானாமதுரை, இளையான்குடி கிராமங்களில் நீண்ட நேர மின்தடையால் மக்கள் அவதி

மானாமதுரை, இளையான்குடி கிராமங்களில் நீண்ட நேர மின்தடையால் மக்கள் அவதி


ADDED : ஜூன் 05, 2024 12:05 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரை,இளையான்குடி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நீண்ட நேர மின்தடை ஏற்படுவதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 39 ஊராட்சிகளில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களும், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 55 ஊராட்சிகளில் 200க்கு மேற்பட்ட கிராமங்களும் உள்ளன.

கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி ஏற்படும் மின்தடை நீண்ட நேரம் தொடர்வதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இப்பகுதியில் கோடை மழை பெய்து வரும் நேரத்தில் ஏற்படும் மின்தடை மழை நின்ற பிறகும் நீண்ட நேரம் தொடர்வதால் இரவு நேரங்களில் இருட்டில் கிராம மக்கள் சிரமப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தால் உடனடியாக மின்தடையை சரி செய்வதற்கு போதுமான ஊழியர்கள் இல்லை என்ற காரணம் கூறுவதாக மக்கள் கூறுகின்றனர்.

மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கிராமப் பகுதிகளில் ஏற்படும் மின்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us