நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் புதுக்காட்டாம்பூரில் நேஷனல் அகாடமி சார்பில் சுதந்திர தின தொழிற்கல்வி நிறுவனங்களுக்கிடையே கபடி போட்டி நடந்தது.
கல்லுாரி நிர்வாகி காசிநாதன் தலைமை வகித்து போட்டிகளை துவக்கினார். முத்தையா மெமோரியல் டிரஸ்ட் வெங்கடேசன் முதல்வர் முன்னிலை வகித்தார், அகாடமி முதல்வர் சுரேஷ் பிரபாகர் வரவேற்றார்.
போட்டிகளில் முதலிடத்தை யாதவா ஐ.டி.ஐ.,யும், இரண்டாமிடத்தை நேஷனல் அகாடமி சமுதாயக் கல்லூரியும், மூன்றாமிடத்தை முத்தையா மெமொரியல் டிரஸ்ட் அணியும் வென்றன. வென்றவர்களுக்கு பூர்விகா மொபைல் நிறுவனத்தினர் சார்பில் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. ஆசிரியர் பூவிழி நன்றி கூறினார்.