ADDED : மே 16, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஆலவிளாம்பட்டி கிரமத்தில் காட்டு நாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.
350 காளைகள் பங்கேற்றன. காளைகள் முட்டியதில் மாடு பிடி வீரர்கள் 7 பேர் காயமுற்றனர். இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை, திருப்புத்துார், காளையார்கோவில், கல்லல் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 350 காளைகள் பங்கேற்றன. 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கினர்.
காலை 10:30 முதல் மதியம் 12:00 மணி வரை நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் கட்டு மாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. காளைகளுடன் களத்தில் வீரர்கள் விளையாடினர்.
காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 7 பேர் காயமுற்றனர்.