/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்காணிப்பு அலுவலர் ஆலோசனை கூட்டம்
/
கண்காணிப்பு அலுவலர் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 05, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரான உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் லால்வேனா தலைமையில் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மக்களை நேரடியாக சென்று சேர வேண்டும். அதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை செய்தனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன், கலெக்டர் பி.ஏ.,க்கள் (பொது) முத்துகழுவன், (நிலம்) சரவணபெருமாள், (வளர்ச்சி) அன்பு, கோட்டாட்சியர் விஜயகுமார், அனைத்து தாசில்தார்கள், மாவட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.