sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் எஸ்.ஐ.,யிடம் மல்லுக்கட்டிய தாய், மகள்

/

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் எஸ்.ஐ.,யிடம் மல்லுக்கட்டிய தாய், மகள்

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் எஸ்.ஐ.,யிடம் மல்லுக்கட்டிய தாய், மகள்

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் எஸ்.ஐ.,யிடம் மல்லுக்கட்டிய தாய், மகள்


ADDED : ஜூலை 05, 2024 10:56 PM

Google News

ADDED : ஜூலை 05, 2024 10:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:காரைக்குடி போலீசார் தன் இரு மகன்கள் மீதும் பொய் வழக்கு போடுவதாக கூறி, சிவகங்கை கலெக்டரிடம் புகார் அளிக்க வந்த தாய் சரிதா 39, மகள் மகாலட்சுமி 19, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதை தடுக்க வந்த பெண் எஸ்.ஐ.,யை கீழே தள்ளிவிட்டு, இரு பெண்களும் மல்லுக்கட்டி உருண்டனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வ.உ.சி., ரோடு சேர்வார் ஊரணியை சேர்ந்தவர் சேட். இவரது மனைவி சரிதா 39. இவர்களுக்கு மகன்கள் குணா 22, மனோஜ்குமார் 20, மகள் மகாலட்சுமி 19, உள்ளனர். சேட் இறந்து விட்டார். காரைக்குடி பஸ் ஸ்டாண்டில் குணாவும், மனோஜ்குமாரும் பழக்கடை நடத்துகின்றனர். இவர்கள் கஞ்சா விற்பதாக கூறி காரைக்குடி போலீசார் வழக்கு பதிந்தனர்.

நேற்று காலை பழக்கடையில் இருந்த குணா, மனோஜ்குமாரை காரைக்குடி போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இதை கண்டித்து காரைக்குடியில் குணா, மனோஜ்குமாரின் தாய் சரிதா, மகாலட்சுமி, பாட்டி தர்ணாவில் ஈடுபட்டனர்.

பெண் எஸ்.ஐ.,யிடம் மல்லுக்கட்டு


இந்நிலையில், சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்த சரிதா, மகாலட்சுமி காரைக்குடி போலீசார் அடிக்கடி குணா, மனோஜ்குமார் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி கலெக்டரை பார்க்க காத்திருந்தனர். சிவகங்கையில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில், அரசின் உணவு பாதுகாப்புதுறை கமிஷனர் லால்வேனா முன்னிலையில் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

சரிதா, மகாலட்சுமி இருவரும் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்திருப்பதாக போலீசார் அறிந்தனர். கலெக்டர் அலுவலக பாதுகாப்பில் இருந்த அமுதா எஸ்.ஐ.,, இருவரையும் தடுக்க முயற்சித்து, மண்ணெண்ணெய் கேனை பறிக்க முயன்றார். அப்போது சரிதா, மகாலட்சுமி இருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, கலெக்டர் அலுவலகத்திற்குள் ஓட முயற்சித்தனர்.

இதை தடுத்த பெண் எஸ்.ஐ.,யை கீழே தள்ளிவிட்டு, மல்லுக்கட்டினர். இதில், பெண் எஸ்.ஐ., உடல் முழுவதும் மண்ணெண்ணெய் கொட்டியது. அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மண்ணெண்ணெய் கேனை பறித்து, எஸ்.ஐ., யை மீட்டனர். போலீசார் தாய், மகள் இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதலுதவி சிகிச்சைக்கு பின் கலெக்டரிடம் மனு அளித்து விட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us