நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை முத்துமாரியம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு, பூச்சொரிதல் விழா ஜூலை29ல் தொடங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. விளக்கு பூஜை, பூச்சொரிதல் நடந்தன.நேற்று காலை பால்குடம் எடுத்து வந்து பாலாபிஷேகம் செய்தனர். இரவில் முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.