/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோட்டையம்மன் கோயிலில் முளைக்கொட்டு திருவிழா
/
கோட்டையம்மன் கோயிலில் முளைக்கொட்டு திருவிழா
ADDED : செப் 04, 2024 12:53 AM

தேவகோட்டை : தேவகோட்டை கோட்டையம்மன் கோயில் ஆவணி முளைக்கொட்டு திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் இரவு மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
தினமும் இரவு கும்மியடித்து முளைக்கொட்டு நடத்தினர். நேற்று முன்தினம் பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிந்து வழிபட்டனர்.
நிறைவு நாளான நேற்று காலை ஏராளமானோர் பால்குடம் எடுத்தும் அலகு குத்தி வேல்காவடி எடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து அபிஷேகம் நடந்தது.
மாலையில் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் சிறப்பு பூஜை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் முளைக்கொட்டு நடத்தினர்.