sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தடுப்பணை அருகே கருவேல மரங்கள்

/

தடுப்பணை அருகே கருவேல மரங்கள்

தடுப்பணை அருகே கருவேல மரங்கள்

தடுப்பணை அருகே கருவேல மரங்கள்


ADDED : ஜூலை 05, 2024 11:43 PM

Google News

ADDED : ஜூலை 05, 2024 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்,: திருப்புவனம் வைகை ஆற்றில் தடுப்பணை அருகே வளர்ந்து வரும் கருவேல மரங்களால் பத்து கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடையும் அபாயம் உள்ளது.

திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் இருந்து மதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், படமாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 36 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுகின்றன. கோடை காலங்களில் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனை தவிர்க்க அருப்புக்கோட்டை கூட்டு குடிநீர் திட்ட கிணறு அருகே நீர்மட்டத்தை உயர்த்த பத்து கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்பட்டது.

திருப்புவனம் ஆண்கள் பள்ளி அருகே கட்டப்பட்ட இந்த தடுப்பணையால் ஓரளவிற்கு கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. இந்நிலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் தடுப்பணை அருகே கருவேல மரங்கள் வளர்ந்து காடாக காட்சியளிக்கிறது. கருவேல மரங்களின் வேர்ப்பகுதி தடுப்பணை வரை நீண்டு வருவதால் தடுப்பணையின் முன்புறம் உள்ள கற்கள் பெயர்ந்து வருகின்றன.

கருவேல மரங்கள் நாளுக்கு நாள் அடர்ந்து வளர்வதால் தடுப்பணையும் சேதமடைய வாய்ப்புண்டு.தடுப்பணை கட்டப்பட்ட நாள் முதல் இன்று வரை எந்த வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.






      Dinamalar
      Follow us