sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புவனத்தில் பனை மரத் திருவிழா

/

திருப்புவனத்தில் பனை மரத் திருவிழா

திருப்புவனத்தில் பனை மரத் திருவிழா

திருப்புவனத்தில் பனை மரத் திருவிழா


ADDED : ஜூலை 07, 2024 02:23 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்:திருப்புவனம் புதுாரில் ஐந்தாண்டுகளுக்கு பின் பனைமரத்திற்கு நடந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து வழிபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதுார் பஜனை மடத் தெருவில் வெற்றிலை விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். வெற்றிலை விவசாயத்தையே நம்பி வாழ்ந்த இவர்கள் வறட்சி காரணமாக வேறு பகுதிகளில் மாற்று தொழிலுக்கு சென்று விட்டாலும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பனை மரத்திருவிழாவில் பங்கேற்க குடும்பத்துடன் வந்து விடுவர்.

இந்தாண்டு திருவிழா ஜூன் 28ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினசரி பனை மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

ஏழாம் நாளான நேற்று முன் தினம் பஜனை மடத்தெருவில் இருந்து பக்தர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டனர்.

நேர்த்தி கடன் விரதமிருந்த பக்தர்கள் 120 அடி நீளமுள்ள மலர் மாலையை தலையில் சுமந்து சென்றனர்.

திருவிழாவிற்காக பொன் முனியாண்டி கோயில் அருகே உள்ள பனை மரம் தேர்வு செய்யப்பட்டிருந்தது.

பனை மரத்திற்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காட்டியபின் விரதமிருந்த நான்கு இளைஞர்கள் 60 அடி உயர பனை மரத்தின் மீது ஏறி நின்றனர்.

கீழிருந்து மலர் மாலையை கயிற்றில் கட்டி பனை மர உச்சிக்கு கொண்டு சென்று அங்கிருந்து பொன் முனியாண்டி சாமி வரை அணிவித்தனர். விடிய விடிய பக்தர்கள் மலர் மாலைகளை பனை மரத்திற்கு அணிவித்த வண்ணம் இருந்தனர்.

பக்தர்கள் கூறியது:

பனை மரத்தில் பொன் முனியாண்டி வசிப்பதாக நம்புகிறோம்.

பனை மரத்திற்கு 120 அடி மாலை அணிவித்து வணங்குவது வழக்கம், இதற்காக ஒரு வாரம் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருப்பார்கள், என்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்புவனம் புதூர் பஜனை மடத்தெரு பக்தர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us