sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கடலை பயிர் மேலாண்மை பயிற்சி

/

கடலை பயிர் மேலாண்மை பயிற்சி

கடலை பயிர் மேலாண்மை பயிற்சி

கடலை பயிர் மேலாண்மை பயிற்சி


ADDED : ஜூன் 08, 2024 05:29 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியம்சேவினிப்பட்டியில் புன்செய் விவசாயிகளுக்கு நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி முகாம் நடந்தது.

திருப்புத்துார் வட்டார அளவிலான விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் அட்மா - விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின்கீழ் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) சண்முகஜெயந்தி விவசாயிகளுக்கு வேளாண் திட்டங்களான ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம், பசுந்தாள் உரம் இடுதல் திட்டம், உழவர் பயிற்சி நிலைய திட்டங்கள் குறித்து விளக்கினார்.

உதவி இயக்குனர் செந்தில்நாதன் பேசுகையில், மண்மாதிரி சேகரித்து மண் ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் உரமிடுதலின் முக்கியத்துவத்தையும், மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.

சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி உதவி பேராசிரியர் மதியழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us