/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
/
திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED : ஜூன் 05, 2024 12:11 AM

திருப்புத்துார், திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பிரகார வலம் வந்தனர்.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பிரதோஷத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.
நேற்று மாலை 5:00 மணிக்கு நந்தி தேவருக்கும், உற்ஸவ மூர்த்திக்கும் பூஜை நடந்து பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் , தீபாராதனை நடந்தது.
பிறகு நந்திதேவருக்கும், பிரதோஷ நாதர்,அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் நடந்து ஆராதனை நடந்தன. தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.
பிரேதாஷநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. பின்னர் புறப்பாடாகி பிரகாரங்களை வலம் வந்தார்.
சிங்கம்புணரி: சிங்கம்புணரி பகுதி கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் நேற்று மாலை 4:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்களும் சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டது.
மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டு பிரதோஷ மூர்த்திகள் புறப்பாடு நடந்தது.
பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில், சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயில், கரிசல்பட்டி கைலாசநாதர் கோயில், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.
*தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடந்தன.
தொடர்ந்து நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி அங்கி சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. வெளிமுத்தியில் பழம்பதிநாதர் கோயிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன.
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில், நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில், திருக்கயிலேஸ்வரர் கோயில், ஆலமரத்து முனீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் வைகாசி பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற வைகாசி பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் 11 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து உற்ஸவர் சோமநாதர் சுவாமி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலை சுற்றி வலம் வந்தனர்.
சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றன. பிரதோஷ விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.